என்னைக்கு கல்யாணம் -இலங்கொடிக்கு
சித்திரை மாதத்திலே- சீர்பாகம் தேதியிலே
ஞாயிறு திங்களுக்கு -நல்ல புதன்கிழமை
கல்யாணமென்று சொல்லி-கடலேறிப் பாக்குமிட்டார்
முகூர்த்தம் நடக்குதினு -முடிமன்னர்க்குப் பாக்குமிட்டார்
ஐம்பத்தாரு அரசர்க்கும்-அருமையாய் சீட்டெழுதி
வாழைமரம் பிளந்து -வாசலெல்லாம் பந்தலிட்டார்
தென்னைமரம் பிளந்து - தெருவெல்லாம் பந்தலிட்டார்
பந்தல் அலங்கரித்து -பாவையை அலங்கரித்தார்.
0 comments:
கருத்துரையிடுக