அமர்க்களமாய் மதிய உணவு.
கறிவிருந்து உண்டு களைத்து
கண்ணயர்ந்த வேளையிலே
கடைக்குட்டி பையன் பயந்து
பதறி ஓடிவந்தான்,
"அப்பா! தெரியாமல் ஒரு
பட்டாம்பூச்சியைக் கொன்றுவிட்டேன்,
இரவில் கனவில் அது பெரிதாகி
என்னைத் துரத்துமா?"
எனக்கு ஏனோ வயிற்றைப் பிசைந்தது!
©2009 அடைமழைக்காலம் | by TNB
0 comments:
கருத்துரையிடுக