ஆதி பகவன் முதற்றே உலகு

பாவம்


ஆடு,கோழி அசைவத்துடன் 
அமர்க்களமாய் மதிய உணவு.
கறிவிருந்து உண்டு களைத்து
கண்ணயர்ந்த வேளையிலே
கடைக்குட்டி பையன் பயந்து
பதறி ஓடிவந்தான்,
"அப்பா! தெரியாமல் ஒரு
பட்டாம்பூச்சியைக் கொன்றுவிட்டேன்,
இரவில் கனவில் அது பெரிதாகி
என்னைத் துரத்துமா?"
எனக்கு ஏனோ வயிற்றைப்  பிசைந்தது!




0 comments:

கருத்துரையிடுக

 
back to top