தும்பைப்பூசெடி கொண்டு
தும்பி துரத்திய காலம்!
கட்டெரும்புக்கு கண்ணீர்விட்டு
கல்லறை எழுப்பிய காலம்!
அர்ச்சுனன் துணைவேண்டி
அடைமழை இடிகேட்டு அரண்ட காலம்!
அம்மாவின் முந்திசீலையை
சுண்டுவிரலிடுக்கில்சுற்றி சுகமாய் கண்ணுரங்கிய காலம்!
ஆஹா!மீண்டும் மழழையாய் மாறேனோ?!
0 comments:
கருத்துரையிடுக