ஆதி பகவன் முதற்றே உலகு

ஏக்கம்


பள்ளி செல்லும் பையனே!
என்னைக் கொஞ்சம் பாரப்பா;
உன்னைப்போல சிறுவன் நான்
உழைத்து உழைத்து தேய்கிறேன் ;

புத்தக பையை சுமந்துநீ
புதிய உலகு படைக்கிறாய்;
புத்திகெட்ட மனிதர் எனை
பொதி சுமக்கச் சொல்கிறார்;

அமிழ்ந்து கிடக்கும் ஆசைகள்
அடிமனதில் பலஉண்டு ;
நினயுலகில் நிற்பதுவோ
நீண்டகால வேதனைகள்.






0 comments:

கருத்துரையிடுக

 
back to top